PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, June 12, 2015

ஹிப்ஹாப் தமிழனின் மற்றுமொரு வெற்றி....இன்று நேற்று நாளை.


மிழ் சினிமா உலகில் புதுவிதபாணியில் வெளியாகவிருக்கிற  நண்பர் ரவிக்குமாரின் இன்று நேற்று நாளை படப்பாடல்கள் இன்று சூரியன் fmல் வெளியிட்டார்கள்.

ஹிப்ஹாப் தமிழன் இசையில் முதன் முதன்முதலாக இசை அமைத்து இரண்டாவதாக வெளியாகிற படம்.  கொஞ்ச நாட்களுக்குமுன் இந்த படத்தின் 'ஐபோன் 6 நீஎன்றால்....' பாடல் ப்ரோமோ வந்து படத்தின் மற்ற பாடல்களைப் பற்றி எதிர்பார்ப்பு எகிறவைத்தது.

'இன்று நேற்று நாளையா...' எனத்தொடங்கும் ஷங்கர் மகாதேவனின் குரலில் தொடங்குகிற பாடல் இளையராஜாவின் எண்பதுகளில் ஒலிக்கும் சோகப் பாடல்களைப்போல இருக்கிறது.  இடையிடையே வருகிற சங்கர் மகாதேவனின் ஆலாபனையும் ஒட்டிவருகிற வீணை இசையும் மனதை என்னவோ செய்கிறது.    காதல் பிரிவில் பாடுகிற பாடலில் சோகம் இழையோடுவது பாடலுக்கு அழகைத் தருகிறது.

அடுத்து ஹிப்ஹாப் தமிழனின் குரலில்  'ஐபோன் 6 நீஎன்றால் நான்தாண்டி செங்கல் செட்டு...'  என்கிற பாடல்.   இது ஆதியின் வழக்கமான ஸ்டைலில் போடப்பட்ட பாட்டு.  'நான் கட்டங்காப்பி.. நீ காபிச்சீனோ.. நமக்குள்ள எப்படி செட்டாகும்ன்டி..." என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.  காதலர்களை வெகுவாகக் கவரப்போகும் பாடல் இது.

அடுத்து வருகிறது.. 'காதலே..காதலே..' பாடல்.  ஷங்கர் மகாதேவனும் பிரேமலதாவும் இணைந்து பாடியிருக்கிற டுயட்.  பிரேமலதாவின் குரல் பிரெஷ்ஷாக இருக்கிறது.  ஷங்கர் மகாதேவன் இடையிடையே தனது ஆலாபனையில் பாடலை வேறு தளத்துக்கு கொண்டு சென்று விடுகிறார்.  திரும்பத் திரும்ப கேட்கவைக்கும் பாடல் இது. இசையும் பாடல்வரிகளும் அருமையாக உள்ளது.  இந்தப் பாடலுக்கான காட்சிகள் எப்படி இருக்கும் என்று இப்போதே கற்பனைகளை உதிக்க வைக்கிறது.

அடுத்து ஒரு குதூகலப் பாட்டு... 'நானேதான் ராஜா...நானேதான் மந்திரி...'.. அந்தோணி தாஸ் பாடிய பாடல்.  அவருடைய வித்தியாசமான குரல் மனசுக்குள் இறங்கி அடிக்கிறது.  துள்ளளிசையும் மனசுக்குள் புகுந்து ஆட்டம் போட வைக்கிறது.


பாடல்கள் நன்றாக வந்ததில் இயக்குனர் ஆர்.ரவிக்குமாரின் உழைப்பும் இசையமைத்த ஆதியின் உழைப்பும்  தெரிகிறது.  பாடல்கள் படத்தை பற்றிய எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துகிறது. வருகிற விளம்பரங்களும் வித்தியாசமானதாக இருக்கிறது.  அதுவும் காந்தியுடன் கதாநாயகன் எடுக்கிற செல்பி விளம்பரம் அட்டகாசம்.  சீக்கிரம் படத்தை காண்பியுங்கள் டைரக்டர் சார்.    





 

1 comment :

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......