PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Saturday, August 27, 2011

நட்பில் தோல்வியுண்டா நண்பா?



நாம் ஒன்றாய்ச்
சாப்பிட்ட எச்சில் தட்டும்,

எப்போதாவது
ஒவ்வொன்றாய் இழுத்த
ஒரே தம்மும்....,

ஒவ்வொரு சிப்பாய்
மாற்றி மாற்றிக் குடித்த
ஒரே எச்சில் தம்ளரும்,

நேரம் போனதே  தெரியாமல்
விடிய விடிய நாம்
பேசிய பேச்சை
ஒட்டுக்கேட்ட
அதே ஒற்றை நிலவும்,

எதிர்காலக் கனவை
பல இரவுகள் திட்டமிட்டதை
பக்கத்தில் இருந்து பார்த்த
இரட்டை தண்டவாளங்களும்,

எப்போதும் நீயே
ஜெயிக்கும் ரகசியம்
தெரிந்த
ஜோக்கர் சீட்டும்,

நீ எனக்காகவும்
நான் உனக்காகவும்
விட்டுக் கொடுத்த
பல்வேறு தருணங்களும்,

நீ எனக்காகவும்
நான் உனக்காகவும்
அடுத்தவர்களிடம்
விட்டுக் கொடுக்காத
பாசமிகு  தருணங்களும்,

உன்னுடையதை
எனக்காகவும்
என்னுடையதை
உனக்காகவும்
செலவழிந்த
ரூபாய் நோட்டுகளும்,

பல வேளை
என் பசியை ஆற்றிய
உன் தாயின்
அன்பு கலந்த
அரிசியும் பருப்புச் சோறும்,

சோர்ந்த போதெல்லாம்
தோளோடு அணைத்து
ஆறுதல் தந்த
நம் தந்தையின்
நம்பிக்கை வார்த்தைகளும்,

என்னைப் பார்த்து
பரிகசிக்கின்றன....

"காதல் தோல்வி
கேட்டதுண்டு ....

 நட்பு தோல்வியை 

இப்போதுதான்
பார்க்கிறேன்"-என்று!


  

7 comments :

  1. உன்னுடையதை
    எனக்காகவும்
    என்னுடையதை
    உனக்காகவும்
    செலவழிந்த
    ரூபாய் நோட்டுகளும்,//nice

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல கவிதை எனக்கு பிடித்தவரிகள்


    நீ எனக்காகவும்
    நான் உனக்காகவும்
    விட்டுக் கொடுத்த
    பல்வேறு தருணங்களும்,

    ReplyDelete
  3. நன்றி மாலதி...

    ReplyDelete
  4. நன்றி லக்ஷ்மி அம்மா...

    ReplyDelete
  5. .அருமையான கவிதைவரிகள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளம்பெற .மிக்க நன்றி பகிர்வுக்கு .........

    ReplyDelete
  6. கவிதையும்,கருத்தும் அருமை.தலைப்பு "தொல்வி"சரியா?

    ReplyDelete
  7. மன்னிக்கவும் @thirumathi bs sridhar..
    எழுத்துப்பிழை ...சரிசெய்து விட்டேன். நன்றி.

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......