சந்தோஷ் சிவனின் உருமி நாளை வெளியாகிறது. நான் இந்தப் படத்தை மலையாளத்தில் பார்த்து எழுதிய விமர்சனத்தை இப்போது மீள்பதிவு செய்கிறேன்.
வாஸ்-கோட-காமா என்றொரு அறிஞர்..அவர் ஒரு கடல் வழி பயணி... அவர் அரபிக்கடலோரம் வந்து கால் பதித்து இந்தியாவை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். அவர் நல்லவர், வல்லவர், நிறைய நாடுகளை கஷ்டபட்டு கண்டுபிடித்தார். என்றெல்லாம் நாம் பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். அப்படியொரு இமேஜை தலை கீழாகப் புரட்டிப்போட்டிருக்கும் படம்- உருமி எனும் மலையாளப் படம். சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் ப்ரிதிவ்ராஜ், பிரபுதேவா, நம்ம ஆர்யா நடித்திருக்கும் படம்.
வாஸ்-கோட-காமா என்றொரு அறிஞர்..அவர் ஒரு கடல் வழி பயணி... அவர் அரபிக்கடலோரம் வந்து கால் பதித்து இந்தியாவை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். அவர் நல்லவர், வல்லவர், நிறைய நாடுகளை கஷ்டபட்டு கண்டுபிடித்தார். என்றெல்லாம் நாம் பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். அப்படியொரு இமேஜை தலை கீழாகப் புரட்டிப்போட்டிருக்கும் படம்- உருமி எனும் மலையாளப் படம். சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் ப்ரிதிவ்ராஜ், பிரபுதேவா, நம்ம ஆர்யா நடித்திருக்கும் படம்.
இதை கேள்விப்பட்ட ராஜா கொத்துவால் (நம்ம ஆர்யா) ஒரு நம்பூதிரியை தனது எழு- எட்டு வயதான மகனோடு சமாதானம் பேச தூதனுப்புகிறான். ஆனால் அந்த நம்பூதிரியின் நாக்கை அறுத்து, மற்றொரு நாயின் காதை அறுத்து நம்பூதிரியின் காதோடு தைக்கப் படுகிறது. இதைகேள்விப் பட்ட கொத்துவால் கப்பலில் புகுந்து வாஸ்கோ-வைத் தாக்குகிறான். வாஸ்கோ தப்பித்துவிட கொத்துவால் கொல்லப்படுகிறான். இதைக் கண்ட கொத்துவாலின் மகன் கேளு கடலில் குதித்து தப்பிக்க கப்பல் தீ வைக்கப்பட்டு எல்லோரும் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.
ஒரு பெண் இறக்கும் தருவாயில்விட்டுச் சென்ற நகைகளை தனது முஸ்லிம் நண்பனுடன் சேர்ந்து அதை உருக்கி வாஸ்கோவை கொல்ல ஆயுதம் செய்கிறான். அதுதான் உருமி. நம்ம ஊர் சுருள் கத்தி. எம்.ஜி.ஆர். சில படங்களில் சண்டை போடுவாரே...அது மாதிரியான ஆயுதம். அதை வைத்துக்கொண்டு கேளு(பிரிதிவி ராஜ்)பெரியவனான பிறகு அதே வாஸ்கோ-வை தனது முஸ்லிம் நண்பன் கவ்வாலி(பிரபு தேவா), போர்த்துகீசியர்களை பழி வாங்கும் எண்ணம் கொண்ட அரக்கல் ஆயிஷா(ஜெனிலியா) ஆகியோரோடு எதிர்த்து சண்டை போட்டு வாஸ்கோவை வென்றார்களா? இல்லையா? என்பதுதான் கதை.
இது உருமிக்கும் தீத்துப்பி(துப்பாக்கி)க்குமான சண்டை.
கதை-திரைக்கதை-வசனம்-சங்கர் ராமகிருஷ்ணன். அழகாக வடிவமைத்திருக்கிறார். சரித்திரத்தின் ஒரு துளி உண்மையை எடுத்துக்கொண்டு கதையை பின்னிய விதம் அருமையோ அருமை. அதில் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களும் விசுவாசத்துக்கு விலை போன தியாகங்களும் அமைத்து கமர்சியல் கதையாக கையாண்ட விதம் அருமை.
சந்தோஷ் சிவன்- அவருடைய கேமராவிற்கு எங்கிருந்துதான் காட்சிகள் கிடைக்கிறதோ... ஒவ்வொரு பிரேமும் மனதை அள்ளுகிறது. பசுமை, வானம், தண்ணீர், மலை எல்லாவற்றையும் கூடுதல் அழகோடு காட்டுகிறது. கொட்டும் அருவியின் ஒரு முனையில் இருந்து பிருதிவியும் மறுமுனையில் நின்று ஜெனிலியாவும் லுக் விட்டுக்கொள்ளும் சீன் கிளாஸ். இதை ராவணனில் பார்த்திருந்த போதும் சலிக்கவில்லை.
வித்யாபாலன் வரும் ஒரு பாடல் ஒளிப்பதிவு விளையாடுகிறது. சந்தோஷ் சிவனின் டைரக்சன் துல்லியமாக உள்ளது. துப்பாக்கியின் வருகையை அழகாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு சீனையும் செதுக்கி எடுத்திருக்கிறார் படத்தின் நீளம் ஏறக்குறைய மூன்று மணி நேரம் அதிகம் தான். எடிட்டிங்கில் கொஞ்சம் ஷார்ப் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும். பழமையையும் புதுமையையும் லிங்க் செய்த விதம் புதுமையாக உள்ளது. மணிரத்னம் பாதிப்பு.
சண்டைக் காட்சிகள் நன்றாகவே உள்ளது. அனல் அரசு அசர அடித்திருக்கிறார். ஜெனிலியாவை நன்றாகவே கொடுத்த காசுக்கு மேலாகவே வேலை வாங்கியிருக்கிறார்கள். அழகாக ஸ்லோ மோஷனில் சண்டை போடும் அழகே தனி. ஜெனிலியாவின் அப்பாவியான அசடான டெம்ப்ளேட்-ஐ இதில் உடைத்துள்ளார்.
நித்யா மேனன் ப்ரெஸ்நெஸ் நன்றாக இருக்கிறது. சில இடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஜெகதி பாபுவின் நடிப்பு நன்றாக உள்ளது. அவரின் நெளிவும், சுளிவும் அருமையான பாடி லாங்வேஜ்.
பிரிதிவிராஜ், பிரபுதேவாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பிரபுதேவாவை காட்சியின் இறுக்கத்தை உடைக்க நன்றாகவே பயன்படுகிறார். ஆர்யா நான் கடவுள் ஜுரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை போலும்-இருப்பினும் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார்.
பழங்கால மலயாளம் நன்றாக புரியும்படி உள்ளது. ஏறக்குறைய தமிழ்தான்.
இன்னும் நன்றாக செதுக்கி இழைத்து தமிழுக்கு கொண்டு வாருங்கள் சந்தோஷ்...ஜெயித்துவிடலாம்.
படம் - பார்க்கலாம் - பார்க்கவேண்டும்.
பாஸ் நித்யா பாஸ்...
ReplyDeleteவிமர்சனம் மிக நேர்த்தி. படம் தமிழ்நாட்டில் இன்னும் வரவில்லையோ எப்படி பார்த்தீர்கள்!
ReplyDeleteபொதுவாக ஒளிப்பதிவாளர்கள் படம் எடுக்கும்போது ஒளிப்பதிவிறக்குமட்டும் கூடுதல் கவனம் செலுத்தி இயக்கத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள் ஆனால் ச.சிவன் /இயக்கம் துல்லியமாக இருக்கிறது என்று/ கூறியிருக்கிறீர்கள் இதுவே படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது. நன்றி அருணா
நன்றி முரளி....
ReplyDeleteநித்யா நித்யாதான்...
அதான் சிக்க வைக்க எல்லா ஏற்ப்படும் நடக்குதே... அப்புறம் ஏன்...
நன்றி டைரக்டர் ரவி சார்...
ReplyDeletei m surprised of your searching thirsty mr.aruna..
ReplyDeletereally this s an exclusive mentality, which will occur only in a rare personalities.. keep it up..