PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, May 11, 2012

ஒரு சாப்பாட்டுராமனின் காதல் கவிதை!



உன் கண்கள்
ஒரு அழகான
ஆப்பாயில்!
வெள்ளைப் புறவிழியின்
நடுவே இருக்கும்
வெந்தும் வேகாத
மஞ்சள் கருவிழி!
ஐந்து விரல்களில்
அப்படியே சுருட்டி
ஒழுகி முடிவதற்குள்
உள்ளே விடத் தோணுதடி!

கொஞ்சம் பெப்பர்
தூவிய
உன் கோபப் பார்வைதானடி
ஆப் அடிக்க 
நல்ல இணையான சைட்டிஸ்!



உன் மெத்தென்ற
கன்னங்கள் இரண்டும்
நீலகிரி பேக்கரியின்
சூடான 'பன்'னுகள்!
நாயர்கடை
டீ வாங்கி
நனைத்துத் தின்ன
உந்தன் பன்னு கன்னங்களை
இரவல் தருவாயா?




அவ்வப்போது வரும்
என் சிறுநீரகப் பிரச்சனைக்கு
உந்தன் வாழைத் தண்டு
கால்களைத் தருவாயா
சூப் வைத்து குடித்து
நிரந்தர நிவாரணம் பெறுகிறேன்!










உன் குடை மிளகா மூக்கை
சற்றே மறைத்து வை
பஜ்ஜிக்கடை பாய்
உன்னைத்தான்
தேடிக்கொண்டிருக்கிறார்!









உன் பலாச்சுளை
காதுகளோடு
கேரளா பக்கம்
போய்விடாதே...
சிப்ஸ் போட்டு
விற்றுவிடுவார்கள்!








உன் மாதுளை பற்களை
காட்டி
அடிக்கடி சிரிக்காதே...
மிக்சியோடு
ஜூஸ் கடைக்காரன்
உன் பின்னாடியே
அலைந்துகொண்டிருக்கிறான்!









உன் இதழோரம்
வழியும் திராட்சை ரசத்தை
சேமித்து
டாஸ்மாக் பாருக்கு
அனுப்பி வை
எந்தன் ஜொள்ளும்
உந்தன் ஜொள்ளும்
கலந்த கலவையில்
புதியதொரு
போதை மிகுந்த
மதுபானம் செய்வோம்!


 

1 comment :

  1. really i laughed a lot for your humor sense...you can try for comedy track in cine field...it s serious aruna.. not a joke

    ReplyDelete

குதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......